இந்திய அரசின் நேசனல் பென்சன் திட்டதில் இணைய மற்றும் மேலும் விபரங்களுக்கு: +91 98941 71402

Friday 30 January 2015

சிம்பிள் சாம்பார்





தேவை:

துவரம் பருப்பு வேகவைத்தது – அரை கப்
நறுக்கிய பீன்ஸ், கேரட், முருங்கைக்காய் – 1 கப்
வெங்காயம், தக்காளி – 1
புளி – சிறிது
சாம்பார் பவுடர் – 2 ஸ்பூன்
மஞ்சள்தூள், வெந்தயம், கடுகு, பெருங்காயத்தூள் – 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – சிறிது

செய்முறை:

கடாயில்  எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், காய்கறிகள், மஞ்சள்தூள், சாம்பார் பவுடர், உப்பு சேர்த்து நன்கு வதக்கி பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகும்வரை கொதிக்க விடவும். 

இப்போது வேகவைத்த பருப்பு, நறுக்கிய தக்காளி சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். சிறிது நேரம் கழித்து புளிக்கரைசலை ஊற்றி இறக்கி விடவும். வேறொரு வாணலியில் கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் தாளித்து சாம்பாரில் கொட்டி பரிமாறவும்.

No comments:

Post a Comment