தேவையான பொருட்கள்
கோழிக்கறி -1/2 கிலோ
பெரிய வெங்காயம் -2
தக்காளி -4
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு -15 பல்
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
துருவிய தேங்காய் - அரை கப்
எண்ணெய் - கால் கப்
காய்ந்த மிளகாய் - 8
கசகசா - 2 ஸ்பூன்
கொத்த மல்லி - 2 ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
பெரிய வெங்காயம் -2
தக்காளி -4
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு -15 பல்
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
துருவிய தேங்காய் - அரை கப்
எண்ணெய் - கால் கப்
காய்ந்த மிளகாய் - 8
கசகசா - 2 ஸ்பூன்
கொத்த மல்லி - 2 ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
கிராம்பு - 3
பட்டை - சிறு துண்டு
சோம்பு - 1 ஸ்பூன்
பட்டை - சிறு துண்டு
சோம்பு - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
கோழியை நன்கு சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியைக் கழுவி நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டினைத் தோலுரித்துப் பொடியாக நறுக்க வேண்டும்.
கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய், துருவிய தேங்காய், கசகசா, கிராம்பு, பட்டை, மல்லி விதை, சீரகம், சோம்பு, ஆகியவற்றைப் போட்டு வறுத்து ஆற வைத்து அதனுடன் இஞ்சி, பூண்டு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
மீதியுள்ள எண்ணெயை காயில் ஊற்றி சூடாக்கி, நறுக்கின வெங்காயத்தை அதில் போட்டு வதக்க வேண்டும். அதனுடன் கறிவேப்பிலை இலைகளையும் அரைத்து வைத்துள்ள மசாலாவினையும் சேர்க்க வேண்டும்.
நன்கு வதக்கிய பிறகு தக்காளி, மிளகுத்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி வேகவிட வேண்டும்.
அதன் பிறகு கோழித் துண்டங்களைச் சேர்த்து சிறிது நேரம் வேகவிட வேண்டும்.
2 கப் தண்ணீர் ஊற்றி, எலுமிச்சை சாறு மற்றும் தேவையான உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்கு வேகவிட வேண்டும்.
கோழி நன்கு வெந்து மிருதுவானவுடன் இறக்கி, மல்லித் தழை தூவிப் பரிமாற வேண்டும்.
சுவையான செட்டிநாட்டு சிக்கன் குழம்பு ரெடி.
No comments:
Post a Comment