இந்திய அரசின் நேசனல் பென்சன் திட்டதில் இணைய மற்றும் மேலும் விபரங்களுக்கு: +91 98941 71402

Friday 30 January 2015

இஞ்சி குழம்பு






தேவையானவை:

துவரம் பருப்பு -2 ஸ்பூன் 
கடலை பருப்பு -2 ஸ்பூன்
சாம்பார் பொடி  -2 ஸ்பூன் 
பெரிய வெங்காயம்  - 3
புளி         - சிறிதளவு  
பூண்டு           - 20 பல்
இஞ்சி       - 25 கிராம் 
வறுத்து பொடித்த வெந்தயம்  - 1 ஸ்பூன் 
கடுகு           - 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி  - சிறிதளவு 
பெருங்காயம்   - சிறிதளவு 
கறிவேப்பிலை –  சிறிதளவு 
நல்லெண்ணெய்   - 4  ஸ்பூன்
உப்பு     - தேவையான அளவு 
புளி     -  சிறிதளவு  

செய்முறை:

முதலில் இஞ்சி இன் தோலியை நீக்கவும் .  பூண்டு உரிக்கவும், வெங்காயம் நறுக்கவும்.
மூன்றையும் மையாக அரைக்கவும்.

கடாயில்   நல்லெண்ணைய்  விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். 

அரைத்த விழுதை போட்டு வதக்கவும். நன்கு எண்ணை
பிரியும் வரை வதக்கவும். மஞ்சள் பொடி சேர்க்கவும்.   1   டம்ளர் தண்ணீர்  விடவும்.

புளி  கரைத்த   தண்ணீர்  சாம்பார் பொடி, பெருங்காய பொடி, வறுத்த வெந்தய பொடிஎல்லாம் சேர்க்கவும் .

நன்கு கொதித்து கெட்டியாகி   எண்ணெய்  பிரிந்து  வரும்போது   இறக்கவும். நல்ல மணமுள்ள இஞ்சி குழம்பு தயார்.

No comments:

Post a Comment