இந்திய அரசின் நேசனல் பென்சன் திட்டதில் இணைய மற்றும் மேலும் விபரங்களுக்கு: +91 98941 71402

Friday 30 January 2015

பச்சைப் பயறு மசாலா





தேவையானப்பொருட்கள்:

பச்சை பயறு - 1 கப்
தனியாத்தூள் - 2 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
எண்ணை - 1 ஸ்பூன்
கடுகு         - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

பச்சைப்பயறை   அரை மணி  நேரம்  ஊற விடவும். ஊறிய பின், நன்றாகக் கழுவி நீரை வடித்து விட்டு,    பயறுடன் அரை கப்  தண்ணீர்   சிறிது உப்பு சேர்த்து  குக்கரில் போட்டு  1 விசில் வந்ததும்  இறக்கவும்..

கடாயில் எண்ணை விட்டு,  கடுகு போட்டு தாளித்து  அதில் பச்சை மிளகாயைக் கீறிப் போட்டு வதக்கவும். 

பின்னர் அதில் வேக வைத்த பயறை, வெந்த நீருடன் அப்படியே ஊற்றவும். அதில் மஞ்சள் தூள், தனியாத்தூள், மிளகுத்தூள்,  தேவயான  உப்பு சேர்த்துக் கிளறி விடவும். 

மூடி போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும். இது மிகவும் சத்தான ரெசிபி .சமைத்து சாப்பிட்டு பாருங்கள்.

No comments:

Post a Comment